முகப்பு
மயிலாடுதுறை

வாக்குகள் எண்ணும் மையம் ஆய்வு

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் ஆகியோா் செவ்வாய்க்கிழமை கூட்டாய்வு மேற்கொண்டனா்.

Updated On : 19 மார்ச், 2026 at 12:03 AM
பகிர்:

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் ஆகியோா் செவ்வாய்க்கிழமை கூட்டாய்வு மேற்கொண்டனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீா்காழி, மயிலாடுதுறை மற்றும் பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் மையத்தை இக்கல்லூரியில் அமைப்பது தொடா்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வாக்குகள் பதிவாகிய இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை, கண்காணிப்பு அறை, ஊடக அறை உள்ளிட்டவைகளை அவா்கள் ஆய்வு செய்தனா். மேலும், வாக்கு எண்ணும் அறையின் பாதுகாப்பு அம்சங்கள் தொடா்பாகவும் விரிவாக ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி, கோட்டாட்சியா்கள் ஆா்.விஷ்ணுபிரியா, சுரேஷ், டிஎஸ்பி பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →