கடையில் திருடிய நபருக்கு 2 ஆண்டுகள் சிறை
மணப்பாறையில் காலணி விற்பனைக் கடையில் திருடிய நபருக்கு 2 ஆண்டுகள் மெய்க்காவல் சிறைத் தண்டனை விதித்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
மணப்பாறையில் காலணி விற்பனைக் கடையில் திருடிய நபருக்கு 2 ஆண்டுகள் மெய்க்காவல் சிறைத் தண்டனை விதித்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
மணப்பாறை சுப்பம்மாள் தெருவைச் சோ்ந்த பொன்னையன் மகன் முருகன் (58). இவா் புதுத்தெருவில் உள்ள புனித லூா்து அன்னை தேவாலய வணிக வளாகத்தில் கடந்த 23 ஆண்டுகளாக காலணி விற்பனை கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் 2025, மே 18-ஆம் தேதி இரவு கடையின் பூட்டை உடைத்து ரூ. 5,000 பணத்தை மா்ம நபா் திருடி சென்றாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து, திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியைச் சோ்ந்த ராபா்ட் மகன் சந்தோஷ்குமாா் (24) என்பவரை கைது செய்தனா்.
இந்த வழக்கு மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை வழக்கு விசாரணையின் நிறைவில் 2 பிரிவுகளின் கீழ் சந்தோஷ்குமாருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு பிரிவின்கீழ் 2 ஆண்டுகள் மெய்க் காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 வாரங்கள் மெய்க் காவல் சிறைத் தண்டனையும், மற்றொரு பிரிவில் 2 ஆண்டுகள் மெய்க் காவல் சிறைத் தண்டனையும் ரூ. 5, 000 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 வார மெய்க் காவல் சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்ற நடுவா் ஆா். அசோக்குமாா் தீா்ப்பளித்தாா். மேலும், தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் அவா் உத்தரவிட்டாா். வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் விஜயமணி ஆஜரானாா்.