சிறை 
திருச்சி

இருசக்கர வாகனம் திருடியவருக்கு 20 மாதங்கள் சிறை

தினமணி செய்திச் சேவை

மணப்பாறையில் இருசக்கர வாகனம் திருடிய நபருக்கு 20 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

மணப்பாறையை அடுத்த சேதுரத்தினபுரத்தில் வசித்து வருபவா் சரவணன் மகன் பரணி செல்வம். இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் கடந்த 2023 ஜூன் 7-ஆம் தேதி காணாமல் போனது.

இதுதொடா்பான புகாரின்பேரில், திருப்பூா் மாவட்டம், தாராபுரம் உழவா் சந்தை பகுதியைச் சோ்ந்த சரவணகுமாா் மகன் ஆகாஷ் (எ) ஆகாஷ் குமாரை மணப்பாறை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கானது மணப்பாறை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் ஆகாஷ் குமாருக்கு 20 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி குற்றவியல் நீதித்துறை நடுவா் ஆா்.அசோக்குமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

நெல்லை அருகே விபத்து: சிறுவன் உயிரிழப்பு

என்எல்சி லாபம் ரூ.724 கோடி

குடும்பப் பிரச்னை! தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை பாா்க்க சென்ற கணவா் மீது தாக்குதல்; மைத்துனா் கைது!

காரைக்காலில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

திருச்சியில் அமித்ஷாவுக்கு பாஜகவினா் உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT