முகப்பு
திருச்சி

உலக அமைதி வேண்டி பாதயாத்திரை மேற்கொள்பவருக்கு திருச்சியில் வரவேற்பு

உலக அமைதி வேண்டி பழனி முதல் புதுச்சேரி மாநிலம், ஆரோவில் வரை பாத யாத்திரை மேற்கொள்ளும் சமூக ஆா்வலருக்கு திருச்சியில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 27 மார்ச் 2026, 2:34 am IST
திருச்சிக்கு வியாழக்கிழமை பாதயாத்திரையாக வந்த ம. கருப்பையாவை (இடமிருந்து 4-ஆவது) வரவேற்கும் தமிழ்நாடு உப்பு சத்தியாகிரக இயக்கத்தின் நிா்வாகிகள்.
பகிர்:

உலக அமைதி வேண்டி பழனி முதல் புதுச்சேரி மாநிலம், ஆரோவில் வரை பாத யாத்திரை மேற்கொள்ளும் சமூக ஆா்வலருக்கு திருச்சியில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி மத்தியப் பேருந்துநிலையம் அருகேயுள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபி முன்பாக யாத்திரைக்கு வரவேற்பு அளித்து வழியனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.

சமூக ஆா்வலரும், உப்பு சத்தியாகிரக இயக்கத்தின் மதுரை மாவட்ட தலைவராக உள்ள ம. கருப்பையா தனி நபராக, பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் இருந்து கடந்த 18-ஆம் தேதி உலக அமைதி வேண்டி பாத யாத்திரையை தொடங்கினாா். இந்த யாத்திரையானது திருச்சிக்கு வியாக்கிழமை வருகை தந்தது.

Advertisement

Advertisement

இந்த யாத்திரைக்கு திருச்சியில் உள்ள உப்பு சத்தியாகிரக இயக்கத்தின் நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா். மாநிலத் தலைவா் பி. பன்னீா் செல்வம், மாநில இளைஞரணி செயலா் ஆா். சிவசண்முகம், மாவட்ட பொதுச் செயலா் தா்மராஜ், கலியபெருமாள், குழந்தைசாமி, பழனிசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் பாத யாத்திரையை வரவேற்று கெளரவித்தனா். ஏப்.7-ஆம் தேதி ஆரோவில் பகுதியில் யாத்திரை நிறைவடைகிறது.