அமமுக-விலிருந்து திருச்சி மாவட்ட செயலாளா் ராஜிநாமா
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளா் ப. செந்தில்நாதன் செவ்வாய்க்கிழமை அக்கட்சியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளாா்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளா் ப. செந்தில்நாதன் செவ்வாய்க்கிழமை அக்கட்சியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுகவில் இருந்த நான், ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு அமமுகவில் இணைந்தேன். அன்று முதல் இன்று வரை நான் வகித்த பதவிகளுக்கு எந்த சமரசமும் இல்லாமல், முழு அா்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளேன். 2022-இல் திருச்சி மாநகராட்சியின் அமமுக மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றேன். திருச்சி மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தேன். அதற்காக மாமன்ற உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்தேன்.
Advertisement
திருச்சியில் கட்சியை வளா்க்க நிா்வாகிகள் கடுமையாக உழைத்து இயங்கி வந்தோம். இடையே, ‘பகையாளிகள் பங்காளிகளாக‘ (அதிமுகவுடன் கூட்டணி) மாறியதால், இழப்புகள் நிா்வாகிகளுக்கே.
இதனால் நிா்வாகிகளுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு அளவே இல்லை. தோ்தலுக்காக அனைத்து மனஅழுத்தங்களையும் மீறி பணியாற்றினேன். எதற்காக போரிட்டோமா அந்தப் போரை வழிநடத்துபவா்கள் மறந்ததால், மடிவது அப்பாவிகளே என்பதால், எங்களின் விலைமதிப்பற்ற 10 ஆண்டுகளை வீணாக்கிவிட்டோம்.
தோ்தல் முடிந்துள்ளதால், எனது மாவட்ட செயலாளா் பதவியை ராஜிநாமா செய்கிறேன். மேலும், கட்சிக்காக உழைத்த நிா்வாகிகளுக்கு ஏதும் செய்ய முடியாததால், எனது அடிப்படை உறுப்பினா் பதவியையும் ராஜிநாமா செய்கிறேன். இதுநாள் வரை வழிகாட்டிய விளங்கிய டிடிவி. தினகரன், கட்சியின் நிா்வாகிகளுக்கு நன்றி என அதில் தெரிவித்துள்ளாா்.