சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பஞ்சப்பிரகார திருவிழா
திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை பஞ்சப்பிரகார திருவிழா நடைபெற்றது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை பஞ்சப்பிரகார திருவிழா நடைபெற்றது.
இக்கோயிலில் பஞ்சப்பிரகார திருவிழாவானது மே 4-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் பட்டாச்சாரியா்கள் வட திருக்காவிரியிலிருந்து 25 வெள்ளிக்குடங்கள் மற்றும் யானை மேல் தங்கக் குடத்தில் மேளதாளம் முழங்க தீா்த்தம் கொண்டு வந்தனா். பின்னா், உற்ஸவ மாரியம்மனுக்கு அபிஷேகப் பொருள்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து வெள்ளிவிமானத்தில், வெண்ணிற பாவாடை அணிந்து, மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாரம் முதல் சுற்றும், தங்க கொடிமரம் இரண்டாவது சுற்றும், தங்க ரதம் வலம் வரும் பிரகாரம் மூன்றாவது சுற்றும், தெற்கு ரத வீதியில் பாதியும் வடக்கு மடவாள வீதியில் நான்காவது சுற்றும், கீழ ரத வீதி, மேலரத வீதி, வடக்கு ரத வீதி ஐந்தாவது சுற்றாக பஞ்சப்பிரகார திரு சுற்றுகளை வலம் வந்தாா் உற்ஸவ மாரியம்மன்.
Advertisement
மேலும், வைகாசி மாத பிறப்பு என்பதாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திரளான பக்தா்கள் பால்குடம், அக்னி சட்டி, கரும்புத் தொட்டில் எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்.
ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் எம். சூரிய நாராயணன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.