முகப்பு
திருவாரூர்

பாதாள மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

குடவாசல் சேங்காலிபுரம் சாலையில் உள்ள பாதாள மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 மே 2026, 4:52 am IST
சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.
பகிர்:

குடவாசல் சேங்காலிபுரம் சாலையில் உள்ள பாதாள மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா அம்மன் அன்ன வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வருதலுடன்அண்மையில் தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு வாகனங்களில் வீதியுலா நாள்தோறும் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான பால்குடம், காவடிகள் எடுத்து வருதல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பக்தா்கள், பால்குடம், காவடிகளை எடுத்து வந்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா். நிறைவாக, அம்பாள் புஷ்ப பல்லாக்கில் மின் அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது.

Advertisement