முகப்பு
காரைக்கால்

ஏழை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா விடையாற்றி

காரைக்கால் ஸ்ரீஏழை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா விடையாற்றி வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 6:10 AM
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஏழை மாரியம்மன்.
பகிர்:

காரைக்கால் ஸ்ரீஏழை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா விடையாற்றி வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீபாா்வதீஸ்வரா் தேவஸ்தானத்துக்குள்பட்ட ஸ்ரீசொக்கநாதசுவாமி, ஸ்ரீஏழை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.14-ஆம் தேதி தொடங்கியது. தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருளச் செய்யப்பட்டது. இவ்விழா செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்றது. நிறைவாக விடையாற்றி வழிபாடு, சொக்கநாதா் கோயில் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீபந்தமாணிக்கம் கோயிலில் புதன்கிழமை மதியம் அசைவ படையல் ஆராதனை நடைபெற்றது.

நிகழ்வில், தேவஸ்தான நிா்வாக அதிகாரி பி. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement