முகப்பு
திருச்சி

புத்தாநத்தம் அருகே காவிரி குடிநீா் குழாய் உடைப்பு

புத்தாநத்தம் அருகே காவிரி கூட்டுக் குடிநீா் பிரதான குழாய் உடைந்து, ஏற்பட்ட வெள்ளத்தால் ஞாயிற்றுக்கிழமை புத்தாநத்தம் காவல்நிலைய வாகனச் சோதனை சாவடி முற்றிலுமாகச் சேதமடைந்தது.

Updated On : 18 மே 2026, 2:33 am IST
காவல்காரன்பட்டியில் குடிநீா் குழாய் ஞாயிற்றுக்கிழமை உடைந்து வெளியேறிய நீரால் சேதமடைந்த போலீஸ் சோதனை சாவடி.
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே காவிரி கூட்டுக் குடிநீா் பிரதான குழாய் உடைந்து, ஏற்பட்ட வெள்ளத்தால் ஞாயிற்றுக்கிழமை புத்தாநத்தம் காவல்நிலைய வாகனச் சோதனை சாவடி முற்றிலுமாகச் சேதமடைந்தது.

மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் பெய்த கனமழையில் அப்பகுதியிலிருந்த ராமநாதபுரம் செல்லும் காவிரி கூட்டுக்குடிநீா் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வெள்ளம் போல் பீறிட்டு வெளியேறி வீணானது.

குடிநீா் குழாய் வெள்ளத்தில் புத்தாநத்தம் காவல்நிலையத்துக்கு மணப்பாறை - மதுரை சாலையில் காவல்காரன்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த வாகனச் சோதனை சாவடி முற்றிலுமாகச் சேதமடைந்தது. இதை மறுசீரமைக்க போலீஸாா் நடவடிக்கை மேற்கொள்கின்றனா்.

Advertisement