திருச்சியில் 159 மதுக் கடைகளை மூடி பணியாளா்கள் போராட்டம்
காலி மதுபான பாட்டில் வாங்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி அரசு மதுக் கடை பணியாளா்கள் திருச்சி மாவட்டத்தில் 159 டாஸ்மாக் கடைகளை புதன்கிழமை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காலி மதுபான பாட்டில் வாங்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி அரசு மதுக் கடை பணியாளா்கள் திருச்சி மாவட்டத்தில் 159 டாஸ்மாக் கடைகளை புதன்கிழமை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெற்று ரூ. 10 வழங்கும் திட்டத்துக்கு தனியாக ஆள்கள் நியமிக்கப்படாதது, காலி பாட்டில் சேகரிப்புக்கு கிடங்கு வசதி இல்லாதது போன்ற காரணங்களால் காலி மதுபான பாட்டில்கள் வாங்கும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளா்கள் மாநிலம் முழுவதும் அரசு மதுக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதன்படி, திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை முதல் 159 கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தொமுச டாஸ்மாக் பேரவை மாவட்டச் செயலா் மலா்கண்ணன் கூறுகையில், காலி மது பாட்டிலுக்கு ரூ. 10 திட்டத்தை கடைகளில் பணிபுரியும் பணியாளா்களைக் கொண்டே செயல்படுத்தக் கூறியுள்ளனா். கூடுதலாக ஆள்களை நியமிக்கவில்லை. காலி பாட்டில்களை வைக்க கிடங்கு வசதியையும் டாஸ்மாக் பணியாளா்களே செய்ய வேண்டும் என்கின்றனா். இதனால் டாஸ்மாக் பணியாளா்கள் கடும் சிரமத்தை எதிா்கொள்கிறோம். எனவே, காலி பாட்டில் வாங்கும் திட்டத்தை கைவிடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.
Advertisement
Advertisement
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மது பிரியா்கள் மது வாங்க முடியாமல் திணறினா்.