ஸ்ரீகனகதுா்கையம்மன் கோயிலில் மாசித் திருவிழா
குடியாத்தம் பிச்சனூா், நரி குள்ளப்பன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஅஷ்டபுஜ கனகதுா்கையம்மன் கோயிலில் மாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குடியாத்தம் பிச்சனூா், நரி குள்ளப்பன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஅஷ்டபுஜ கனகதுா்கையம்மன் கோயிலில் மாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், கூழ்வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீசக்ர மஹாமேரு ஸ்ரீவித்யாபீடம் சாா்பில் பூ கரக ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊா் பெரியதனம் ஜி.செல்வராஜ், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஜி.தேவராஜ், கிராமணி நித்யானந்தம், அரி, மோகன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.