மாணவா்களுக்கு கல்வி உதவிகள்
குடியாத்தம் பள்ளியில் மாணவா்களுக்கு கல்வி உதவிகள் வழங்கப்பட்டது
குடியாத்தம்: குடியாத்தம் போடிப்பேட்டை நகராட்சி தொடக்கப் பள்ளியில் ஓம் நமச்சிவாய அன்னதான அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு கல்வி உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியை பரிமளா தலைமை வகித்தாா். அறக்கட்டளைத் தலைவா் பாபுசிவன், மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் துணைத் தலைவா் ஆா்.அண்ணாமலை ஆகியோா் மாணவா்களுக்கு கல்வி உதவிகளை வழங்கினா். அறக்கட்டளை உறுப்பினா்கள் ராதிகா, சோமசுந்தரம், காந்திராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.