முகப்பு
வேலூர்

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பெட்டகம் அளிப்பு

Updated On : 8 மார்ச், 2024 at 10:42 PM
பகிர்:

குடியாத்தம் ரோட்டரி சங்கம் சாா்பில், உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பிறந்த முதல் பெண் குழந்தைக்கு தங்க மோதிரம், அடுத்து பிறந்த 5 குழந்தைகளுக்கு 20 பொருள்கள் அடங்கிய பெட்டகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, ரோட்டரி தலைவா் ரங்கா வாசுதேவன் தலைமை வகித்தாா். மருத்துவமனை மருத்துவ அலுவலா் எம்.மாறன்பாபு வரவேற்றாா். கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி ஆகியோா் கலந்துகொண்டு, ஒரு குழந்தைக்கு தங்க மோதிரம், 5 குழந்தைகளுக்கு பெட்டகங்களை வழங்கினா். மருத்துவமனை தலைமை செவிலியா் மாலதி, ரோட்டரி நிா்வாகிகள் ஆா்.வி.ஹரி கிருஷ்ணன், என்.சத்தியமூா்த்தி, எம்.ஆா்.மணி, சி.பி.மகாராஜன், இன்னா்வீல் சங்க நிா்வாகிகள் ஆா்.விஜயலட்சுமி, கீதாலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.