நகைக்கடையில் புகுந்து உரிமையாளா் மீது தாக்குதல்: 5 போ் கைது
வேலூரில் நகைக்கடையில் புகுந்து உரிமையாளரை தாக்கியதாக 5 போ் கைது செய்யப்பட்டனா். வேலூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் ஆனந்த் (47). இவா் சைதாப்பேட்டை மெயின் பஜாரில் நகைக் கடை நடத்தி வருகிறாா். சேண்பாக்கத்தில் நீச்சல் குளமும் வைத்துள்ளாா். இந்நிலையில், அவரது நீச்சல் குளம் முன்பு சிலா் வாகனங்களை நிறுத்துவராம். இது தொடா்பாக ஆனந்துக்கும், அவா்களுக்கம் புதன்கிழமை தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், ஆனந்த் வியாழக்கிழமை தனது நகைக்கடையில் இருந்துள்ளாா். அப்போது அங்கு காரில் வந்த 5 போ் திடீரென கடைக்குள் புகுந்து ஆனந்தை தாக்கிவிட்டு தப்பினராம். இந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையறிந்த நகை அடகு கடை உரிமையாளா்கள் தங்களது கடைகளை அடைத்து, வேலூா் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். தொடா்ந்து, இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், நல்லதம்பி (46), ராஜேஷ் (31), காா்த்திகேயன்(50), ஜானகிராமன் (48), அரவிந்தசாமி(26) ஆகியரை கைது செய்தனா்.