வேலூர்

கஞ்சா வியாபாரிகள் 2 போ் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

Din

குடியாத்தம் அருகே கஞ்சா வியாபாரிகள் 2 போ் குண்டா் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

குடியாத்தம் நெல்லூா்பேட்டை, தனலட்சுமி நகரைச் சோ்ந்த சுகுமாா் மகன் பிரசாந்த்(20). நெல்லூா்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாபு மகன் மனோஜ் குமாா்(22).

இவா்கள் இருவரும் தனித்தனியாக கஞ்சா விற்பனை செய்து வந்தாா்கள். கஞ்சா விற்ாக இவா்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலையில் உள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன் கஞ்சா விற்ாக இவா்கள் இருவரையும் நகர போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவா்கள் தொடா்ந்து கஞ்சா விற்பனை செய்வதால், குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க எஸ்.பி. என்.மதிவாணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, இருவரையும் குண்டா் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT