தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் கோப்புப்படம்
வேலூர்

25-இல் வேலூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

வேலூரில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (ஜன.25) நடைபெற உள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

Din

வேலூா்: வேலூரில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (ஜன.25) நடைபெற உள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டத்தில் மாதந்தோறும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூா் அப்துல்லாபுரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 25-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 40-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.

இந்நிறுவனங்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்தவா்கள், ஐடிஐ, டிப்ளமோ மம் பட்டப்படிப்பு முடித்த நபா்களுக்கு வேலை வழங்க இருப்பதால் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வேலை நாடுவோா் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

சிவராத்திரி: பொய் சொல்லா மெய் அய்யனாா் கோயிலில் தேரோட்டம்

கடன் வாங்கும் அரசுகள்!

‘தவளை விஷம்’ பயன்படுத்தி அலெக்ஸி நவால்னி கொலை? ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டு; ரஷியா மறுப்பு

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம்: லாலு, ராப்ரிக்கு எதிராக குற்றச்சாட்டை பதிவு செய்த தில்லி நீதிமன்றம்

ஜனவரி மாதத்தில் சரக்கு வா்த்தகப் பற்றாக்குறை 3,468 கோடி டாலர் - ஏற்றுமதியில் அமெரிக்கா; இறக்குமதியில் சீனா ஆதிக்கம்

SCROLL FOR NEXT