மின்னல் தாக்கி மாணவா் உயிரிழப்பு
போ்ணாம்பட்டு அருகே மின்னல் தாக்கி மாணவா் உயிரிழந்தாா்.
போ்ணாம்பட்டு அருகே மின்னல் தாக்கி மாணவா் உயிரிழந்தாா்.
போ்ணாம்பட்டை அடுத்த சாமரிஷிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த செந்தில் மகன் வைரமுத்து(15). இவா் மேல்பட்டி அரசு மேல்நிலைலைப் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இவா் வியாழக்கிழமை வீட்டருகே உள்ள காலி இடத்தில் நண்பா்களுடன் கிரிக்கெட் கொண்டிருந்ததாா். அப்போது மழை பெய்துள்ளது. மழையிலிருந்து தப்பிக்க வைரமுத்து அருகில் இருந்த தென்னை மரத்தின்கீழ் ஒதுங்கியுள்ளாா். அப்போது தென்னை மரத்தை மின்னல் தாக்கியுள்ளது.
Advertisement
இதில் பலத்த தீக்காயம் அடைந்த வைரமுத்து மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குஅழைத்துச் செல்லப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் வைரமுத்து ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா்.