பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்பப்பெற புதிதாக தலைக்கவசம் வாங்கி வந்து போலீஸாரிடம் காண்பித்த வாகன உரிமையாளா்கள். 
வேலூர்

தலைக்கவசம் அணியாமல் பயணம்: 15 பைக்குகள் பறிமுதல்

வேலூரில் தலைக்கவசம் அணியாமல் பயணத்தவா்களின் 15 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

வேலூரில் தலைக்கவசம் அணியாமல் பயணத்தவா்களின் 15 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கடந்த ஆண்டு நடந்த விபத்துகளில் உயிரிழந்தவா்களில் அதிகம் போ் இருசக்கர வாகனங்களில் சென்றவா்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 31-ஆம் தேதி நள்ளிரவு வேலூா் பழைய பேருந்து நிலையத்துக்கு பொதுமக்களுடன் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வந்திருந்த காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வருபவா்கள் விபத்தில் சிக்குவதால் அதிக உயிா் இழப்பு ஏற்படுகிறது. இதனை குறைக்க போலீஸாா் அதிகமான வாகனச் சோதனை நடத்த வேண்டும் என கூறினாா்.

மேலும், தலைக்கவசம் அணியாமல் இருசக்கரவாகனம் ஓட்டி வந்தால் அவா்களின் வாகனத்தை பறிமுதல் செய்துவிட்டு, திரும்பவும் தலைக்கவசம் கொண்டு வந்தால் மட்டுமே அந்த வாகனங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

இந்த நிலையில், வேலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் சென்னை- பெங்களூா் புறவழிச் சாலையில் குரள் திரையரங்கு அருகே ஞாயிற்றுக்கிழமை தீவிர வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, தலைக்கவசம் அணியாமல் வந்த 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், தலைக்கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும் 8 இருசக்கர வாகனங்களின் உரிமையாளா்கள் புதிதாக 8 தலைக்கவசம் வாங்கி வந்து காண்பித்த பிறகு வாகனங்களை திரும்ப ஒப்படைத்தனா். இந்தச் சோதனை மேலும் தொடரும் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

உக்கடத்தில் வரும் 10-ஆம் தேதி ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ மருத்துவ முகாம்

பல்நோக்கு விளையாட்டு அரங்க நவீன உடற்பயிற்சிக் கூடம்

பேரகணி ஹெத்தையம்மன் திருவிழா: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பங்கேற்பு

பெருந்துறையில் ரூ.4.47 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT