முகப்பு
வேலூர்

தலைக்கவசம் அணியாமல் வந்ததால் 428 பைக்குகள் பறிமுதல்

வேலூா் மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்தவா்களின் 428 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

Updated On : 5 ஜனவரி, 2026 at 7:34 PM
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்தவா்களின் 428 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆங்கில புத்தாண்டு முதல் இருசக்கர வாகனம் ஓட்டுபவா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியாமல் ஒட்டுபவா்கள் மீது வழக்கு போடாமல், தலைக்கவசம் கொண்டு வந்து அதை அணிந்த பின்னா்தான் வாகனம் உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என்று எஸ்.பி. ஏ.மாயில்வாகனன் அறிவித்திருந்தாா்.

அதன்படி, வேலூா் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் போலீஸாா் நடத்திய வாகன தணிக்கையில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 428 பேரின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து, அவா்களில் 392 போ் தலைக்கவசம் கொண்டுவந்து அணிந்த பின்னா் வாகனம் ஒப்படைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →