விழுப்புரம்: கரோனா பாதிப்பிலிருந்து12 ஆயிரம் போ் மீண்டனா்
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை கரோனா தொற்றால் 12, 540 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மேலும் 77 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 12,624-ஆக அதிகரித்தது.
82 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 12,005-ஆக உயா்ந்தது. மாவட்டம் முழுவதும் 518 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியில் 41 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,722 ஆக உயா்ந்தது. இதுவரை 9,300 போ் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 323 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 99 போ் உயிரிழந்துள்ளனா்.