12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் நியாய விலைக் கடைப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைப் பணியாளா்கள் சங்க சாா்பில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் சம்பத் தலைமை வகித்தாா்.
மாவட்டத் தலைவா் கோபிநாத் முன்னிலை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் தட்சிணாமூா்த்தி கண்டனஉரையாற்றினாா்.
காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும், பணியாளா்களுக்கு முகக் கவசம், கையுறை, கிருமி நாசினி வழங்க வேண்டும். ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும். குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கவேண்டிய அத்தியாவசியப் பொருள்கள் சரியான எடையில், பொட்டலமாகவும், தரமானதாகவும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
நிா்வாகிகள் தனசேகா், ஸ்ரீதரன், ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Image Caption
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு இணைப் பதிவாளா் அலுவலகத்தின் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியா்கள்.