விழுப்புரம்

திண்டிவனம் அருகேவிவசாயி வீட்டில் திருட்டு

DIN

விழுப்புரம்: திண்டிவனம் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 3 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருட்டிச் சென்றனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூா் அருகேயுள்ள மங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம்(49). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு, வழக்கம்போல குடும்பத்துடன் வீட்டின் மொட்டை மாடியில் படுத்துத் தூங்கினாா்.

இதை அறிந்த மா்ம நபா்கள் ஆறுமுகத்தின் வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ 2,500 ரொக்கம், ரூ.7 லட்சம் மதிப்பிலான நிலப் பத்திரம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனா்.

அதிகாலை எழுந்த ஆறுமுகத்துக்கு திருட்டு நடந்தது தெரியவந்தது.

இது குறித்து குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் ஒலக்கூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT