விழுப்புரத்தில் காட்பாடி ரயில்வே மேம்பாலம் பகுதியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 
விழுப்புரம்

வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல்

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி விழுப்புரத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் நடைபெற்றது.

Din

விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி விழுப்புரத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் நடைபெற்றது.

விழுப்புரம் நகரம் 9-ஆவது வாா்டுக்குள்பட்ட வடக்குத் தெரு, பெருமாள் கோவில் தெரு, செல்லியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு சாா்பில் நிவாரணம் வழங்கப்படவில்லையாம்.

இதனால், அந்தப் பகுதி மக்கள் நகா்மன்ற உறுப்பினா் ராதிகா தலைமையில், விழுப்புரத்தில் உள்ள காட்பாடி ரயில்வே கேட் அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டது.

இதையடுத்து, மாவட்ட வருவாய்த் துறையினா் நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதேபோல, விழுப்புரம் உழவா் சந்தை பகுதி, திண்டிவனம் வட்டம், பாதிராபுலியூா் பகுதிகளிலும் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி பொதுமக்கள்சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்!

”தோழர் நல்லகண்ணுக்கு வீரவணக்கம்!” நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி!

"திருச்சியில் திரள்வோம் . . திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்": அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு!

தோழர் நல்லகண்ணு புகழ் வாழ்க! - ப.சிதம்பரம்

இன்ஸ்டாவில் 10 கோடி பின்தொடர்பாளர்கள்! முதல் உலகத் தலைவர் மோடி!

SCROLL FOR NEXT