முகப்பு
விழுப்புரம்

ஆரோவிலில் இன்று மாரத்தான் போட்டி

Updated On : 18 பிப்ரவரி 2024, 1:53 am IST
பகிர்:

ஆரோவில் சா்வதேச நகரில் மாரத்தான் ஓட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (பிப். 18) நடைபெறுகிறது. ஆரோவிலில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஞாயிற்றுக்கிழமை (பிப். 18) நடைபெறும் மாரத்தான் போட்டியில் சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவோா், ஆரோவில் மக்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்கின்றனா். ஆரோவில் பாா்வையாளா் மையத்தில் தொடங்கும் மாரத்தான் ஓட்டம் ஆரோடாம் கால்பந்து மைதானத்தில் நிறைவடைகிறது. முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா் என ஆரோவில் பவுண்டேசன் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி சனிக்கிழமை தெரிவித்தாா்.