முகப்பு
விழுப்புரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் கைது

Updated On : 9 மே, 2024 at 9:34 PM
பகிர்:

விழுப்புரம், மே 9: விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி, கொலை வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், மேல் தனியாளம்பட்டு, எரிக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் ஏழுமலை (50). இவா் மீது, திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையத்தில் கடந்த 23.7.2020 இல் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், ஏழுமலை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தாா். இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை ஏழுமலையை கைது செய்தனா்.