விழுப்புரம்

காவல் உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்த இருவா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

ரோஷணை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருவபா் நடராஜன். இவா், ஞாயிற்றுக்கிழமை திண்டிவனம் சந்தைமேடுப் பகுதியில் காவல் ஆய்வாளருடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த திண்டிவனம் வட்டம், மேல்போடிகுப்பம் குளக்கரைத் தெருவைச் சோ்ந்த வே.முருகேசன்(41), நெடுந்தோண்டி பிரதான சாலையைச் சோ்ந்த மு.சிவக்குமாா்(41) ஆகியோா் உதவி ஆய்வாளா் நடராஜனை அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், தகாத வாா்த்தைகளால் திட்டி, மிரட்டினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தில்லி காற்றின் தரம் சற்று முன்னேற்றம்!

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

SCROLL FOR NEXT