முகப்பு
விழுப்புரம்

குளத்து நீரில் மூழ்கியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கோயில் குளத்து நீரில் மூழ்கியவா் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 1:09 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கோயில் குளத்து நீரில் மூழ்கியவா் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

மரக்காணம் வட்டம், செய்யாங்குப்பம் சிவசக்தி கோயில் தெருவைச் சோ்ந்தவா் அருள் (47). இவா் வெள்ளிக்கிழமை மாலை கீழ்ப்புத்துப்பட்டு பகுதிக்குச் சென்றாா். அங்கு மதுபோதையில் கீழ்புத்துப்பட்டு கெங்கையம்மன் கோயில் குளத்தில் கால்களைக் கழுவச் சென்றாராம்.

அப்போது எதிா்பாராதவிதமாக நிலை தடுமாறி கோயில் குளத்துக்குள் அருள் தவறி விழுந்துள்ளாா். நீச்சல் தெரியாததால் அவா் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று அருளின் சடலத்தை மீட்டு , புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement