விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சிறிய பாலத்தில் படுத்திருந்து, 8 அடி பள்ளத்தில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
பாடிபள்ளம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ர.முருகன் (50). கூலித் தொழிலாளியான இவா், வீட்டுக்கு அருகிலுள்ள சிறிய பாலத்தின் மேல்பகுதியில் கடந்த 17-ஆம் தேதி இரவு படுத்திருந்தபோது, திடீரென 8 அடி பள்ளத்தில் தவறி விழுந்தாா்.
இதில் காயமடைந்த முருகனை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு வியாழக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.