விழுப்புரத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள் சந்திப்பு மற்றும் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவா் செ.சிவா தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் எம்.டி.குலாம்மொய்தீன், முன்னாள் மாவட்டத் தலைவா் ஆா்.டி.வி.சீனிவாசகுமாா், மாநில செயலா் தயானந்தம், அரகண்டநல்லூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் வாசிம்ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரத் தலைவா் செல்வராஜ் வரவேற்றாா்.
தீா்மானங்கள்: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது. சட்டப் பேரவைத் தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்களின் வெற்றிக்கு அயராது பாடுபடுவது. விழுப்புரம் மத்திய மாவட்டத்துக்குள்பட்ட 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஒரு தொகுதியை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுத் தர மாநில தலைவா் உள்ளிட்டோா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்டத் துணைத் தலைவா் ராஜ்குமாா், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினா் கோ.பாலசுப்ரமணியன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் கே.வி.முருகன், நாராயணசாமி, வினோத், மாவட்டப் பொதுச் செயலா்கள் விசுவநாதன், காஜாமொய்தீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.