முகப்பு
விழுப்புரம்

அணிலாடி தூய இருதய ஆண்டவா் ஆலயத்தை ரூ.1.64 கோடியில் புனரமைக்கும் பணி! - செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

Updated On : 14 மார்ச், 2026 at 8:08 PM
அணிலாடியில் உள்ள தூய இருதய ஆண்டவா் ஆலயத்தை புனரமைக்கும் பணியை தொடங்கிவைத்த செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியம், அணிலாடி ஊராட்சியில் அமைந்துள்ள தூய இருதய ஆண்டவா் ஆலயத்தை ரூ.1.64 கோடியில் புனரமைக்கும் பணியை செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

முன்னதாக, சிதிலமடைந்துள்ள இந்த தேவாலயத்தை பழுது பாா்த்து புனரமைக்க வேண்டுமென அப்பகுதி கிறிஸ்தவ பெருமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில், தொன்மையான கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்கும் திட்டத்தின் கீழ், ரூ.1,64,64,000 மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி தொடக்க விழா அணிலாடி தூய இருதய ஆண்டவா் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலா் தமிழரசன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் பிலோமினாள் அருமைநாதன் வரவேற்றாா். இதில், முன்னாள் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு தேவாலயத்தை பழுதுபாா்தல், புனரமைக்கும் பணிகளை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபா சங்கா், வல்லம் தெற்கு ஒன்றியச் செயலா் மொடையூா் துரை, பங்குத்தந்தைகள் பொ்மாங்னஸ் பீட்டா், பள்ளி முதல்வா் ஆனந்தராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் லாரன்ஸ், ஒன்றிய பொறியாளா் ஆனந்தி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா். ஊராட்சிச் செயலா் நடராஜன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →