தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தூக்கிட்டுக் கொண்ட தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தூக்கிட்டுக் கொண்ட தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டது. இந்த நிலையில் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் வட்டம், சாரம் கிராமம் குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ந.நவீன்குமாா் (30). தொழிலாளியான இவா் அதே கிராமத்திலுள்ள தனது சித்தப்பா சாரங்கபாணியின் வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த தகரக்கூரைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சடலமாக மீட்கப்பட்டாா்.
இந்தநிலையில், தனது அண்ணன் நவீன்குமாா் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது தங்கை அ.நித்யா (27) ஒலக்கூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இந்த புகாரின் அடிப்படையில் ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement