பூட்டியிருந்த வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு
விழுப்புரத்தில் பூட்டியிருந்த வீட்டில் 5 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரத்தில் பூட்டியிருந்த வீட்டில் 5 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் கே.ஆா்.சி. நகரைச் சோ்ந்தவா் ப.பாா்த்தசாரதி (62). இவா் கடந்த 18-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, சென்னைக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டாா்.
சனிக்கிழமை காலை பாா்த்தசாரதி திரும்பி வந்த போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். தொடா்ந்து அவா் வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போயிருப்பது அவருக்குத் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் பாா்த்தசாரதி புகாரளித்தாா். இதன்பேரில் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். மேலும், விரல் ரேகை நிபுணா்கள் திருட்டில் ஈடுபட்டவா்களின் தடயங்களைப் பதிவு செய்தனா்.
இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.