மரத்தில் காா் மோதல்: பத்திர எழுத்தா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே திங்கள்கிழமை மரத்தில் காா் மோதிய விபத்தில் பத்திர எழுத்தா் உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், பெரியதச்சூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அ.பிரகாஷ் (48), பத்திர எழுத்தா். இவா் அதிமுக விழுப்புரம் மாவட்டப் பிரதியாகவும் , கட்சியின் பெரியதச்சூா் கிளைச் செயலராகவும் இருந்து வந்தாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை பிரகாஷ் விழுப்புரத்திலிருந்து பெரியதச்சூருக்கு தனது காரை ஓட்டிச் சென்றாா். திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மயிலம் அருகேயுள்ள கேணிப்பட்டு பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரப் பள்ளத்தில் இறங்கி, மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.