முகப்பு
கடலூர்

பிளஸ்டூ தேர்வு: மறுகூட்டலுக்கு பின் சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவி மாவட்டத்தில் 3-ம் இடம்

பிளஸ்டூ பொதுத்தேர்வில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி பி.ஆர்.ஸ்ரீநிதி 1161 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மறுக்கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்காக அம்மாணவி

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:14 PM
பகிர்:

பிளஸ்டூ தேர்வில் மறுகூட்டலுக்கு பின்னர் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.ஆர்.ஸ்ரீநிதி கூடுதலாக மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளார்.

பிளஸ்டூ பொதுத்தேர்வில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி பி.ஆர்.ஸ்ரீநிதி 1161 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மறுக்கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்காக அம்மாணவி விண்ணப்பித்திருந்தார். மறுகூட்டலில் தமிழில் கூடுதலாக 14 மதிப்பெண்கள் பெற்று 1175 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதன் மூலம் மாணவி பி.ஆர்.ஸ்ரீநிதி கடலூர் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தையும், சிதம்பரம் நகர அளவில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுகூட்டலில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஸ்ரீநிதியை பள்ளி தாளாளர் வீனஸ் எஸ்.குமார், தலைமை ஆசிரியர் ஜி.மகேஷ்சுந்தர் ஆகியோர் பாராட்டினர். இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆர்.ஸ்ரீதுர்கா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →