காசநோய் ஓழிப்பிற்கு, சிதம்பரம் பள்ளி மாணவர்கள் திரட்டிய ரூ 77 ஆயிரம் நிதி!
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனமான இந்தியன் டெவலப்மெண்ட் நிறுவனம், இந்தியாவில் 17 நகரங்களில் மருத்துவமனை நிறுவி காசநோய, எய்ட்ஸ் ஆகியவற்றிற்கு
காசநோய் ஒழிப்பிற்காக, சிதம்பரம் பள்ளி மாணவர்கள் ரூ.77,120 ரூபாய் நிதியை திரட்டி வழங்கியுள்ளனர்.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனமான இந்தியன் டெவலப்மெண்ட் நிறுவனம், இந்தியாவில் 17 நகரங்களில் மருத்துவமனை நிறுவி காசநோய, எய்ட்ஸ் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளித்து வருகிறது.
இந்நிறுவனம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும், மாணவர்களிடையே சேவை மனப்பாண்மையை ஊக்குவிக்கும் நோக்கமாக தொடர்ந்து 7 ஆண்டுகளாக அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நிதி திரட்டி அளித்து வருகின்றனர். இந்த ஆண்டு ரூ.77120 நிதியை திரட்டி வழங்கியுள்ளனர்.
பள்ளியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவன மேலாளர் பி.ஸ்ரீராமிடம், திரட்டப்பட்ட நிதியை பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.தர்பாரண்யன் மற்றும் மாணவ, மாணவியர்கள் வழங்கினர். கடந்த 7 ஆண்டுகளாக இப்பள்ளி மாணவர்கள் ரூ.11 லட்சம் நிதியை திரட்டி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.