கடலூர்

இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினமணி

கடலூரில் இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.தேவா தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர் ஆர்.சரவணன், பண்ருட்டி ஒன்றிய பொதுச் செயலர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கடலூர் ஒன்றிய பொதுச் செயலர் சத்தியமூர்த்தி வரவேற்றார். மாநிலச் செயலர் கொள்ளிடம் சாமிநாதன், நாகை மாவட்ட அமைப்பாளர் பாலாஜி, இந்து திருக்கோயில் சொத்துப் பாதுகாப்பு குழுத் தலைவர் ஆசா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
 ஆர்ப்பாட்டத்தில், விருத்தாசலம் விருத்தகிரிஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சிலை கடத்தல் மற்றும் கோயிலில் நடைபெறும் முறைகேடுகளை கண்டிப்பதாகக் கூறியும், இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பேசினர்.
 குறிஞ்சிப்பாடி ஒன்றியத் தலைவர் ராஜேந்திர பிரசாத் நன்றி கூறினார். பின்னர், கடலூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT