கடலூர்

அரசுப் பொருள்காட்சி நிறைவு: நுழைவுக் கட்டணமாக ரூ.9.57 லட்சம் வசூல்

தினமணி

கடலூரில் 45 நாள்கள் நடைபெற்ற அரசுப் பொருள்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
 தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகளை மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் 27-க்கும் மேற்பட்ட அரசுத் துறை அரங்குகள், பல்வேறு தனியார் அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய மாபெரும் அரசுப் பொருள்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பொருள்காட்சி மே 4 முதல் ஜூன் 18-ஆம் தேதி வரை நடைபெற்றது.
 பொருள்காட்சியை மொத்தம் 69,757 பேர் பார்வையிட்டுள்ளனர். இதற்கான நுழைவுக் கட்டணமாக பொதுமக்களிடமிருந்து ரூ.9.57 லட்சம் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
 கண்காட்சியில், போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இனி வரும் காலங்களில் இந்தக் குறைபாட்டை சரிசெய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT