கடலூர்

குமராட்சியில் கடையடைப்பு

DIN

சிதம்பரம் அருகே குமராட்சியில் கடை மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, வர்த்தகர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
 குமராட்சி கடை வீதியில் பாண்டிதுரை என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். கடை உள்ள இடத்தின் உரிமையாளர்கள் மனோகர், சிவசங்கரன், ஸ்ரீதரன், மாலதி ஆகியோருக்கு இடையே பாகப் பிரிவினை மற்றும் கடை வாடகை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
 இந்த நிலையில் வியாழக்கிழமை மாலதி என்பவர், பாண்டிதுரையின் கடையை சேதபடுத்தியும், தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து வர்த்தக சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். மேலும், குமராட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT