கடலூர்

அரசு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு தேர்வு

DIN

கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடத்துக்கான தேர்வை 4,280 பேர் எழுதினர்.
அரசு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடத்துக்கான, நேரடி நியமனத்துக்கான போட்டி எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில் இந்தத் தேர்வை 14 தேர்வு மையங்கள் மூலம் 5,393 தேர்வர்கள் எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் வரை நடைபெற்றது. தேர்வை முன்னிட்டு அனைத்து தேர்வு மையங்களுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டதோடு, தேர்வர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.
இந்தத் தேர்வை மாவட்டம் முழுவதும் 4280 பேர் மட்டுமே எழுதினர். அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 1,113 பேர் தேர்வை எழுதவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT