கடலூர்

சத்துணவு ஊழியர்கள் சங்க ஒன்றிய மாநாடு 

தினமணி

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் கடலூர் ஒன்றிய மாநாடு கடலூரில் அண்மையில் நடைபெற்றது.
 சங்கத் தலைவர் கே.சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சி.மச்சேந்திரன், துணைத் தலைவர் ஏ.சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் எல்.அரிகிருஷ்ணன், மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.பாலசுப்ரமணியன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சி.குழந்தைவேலு உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
 மாநாட்டில் சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஏ.வேலு, செயலராக எஸ்.டெல்லிகுமார், பொருளாளராக டி.ஜெயசந்திரன், துணைத் தலைவர்களாக கே.சுப்ரமணியன், ஆர்.கருணாகரன், இணைச் செயலர்களாக வி.குமுதா, எஸ்.மல்லிகா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 சிறப்பு கால முறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர்களை கால முறை ஊதியத்தில் கொண்டு வர வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ. 5 லட்சம், சமையலர், உதவியாளர்களுக்கு ரூ. 3 லட்சம் சிறப்பு ஒட்டு மொத்த தொகையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட
 பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT