கடலூர்

விபத்தில் இளைஞர் சாவு

DIN

பண்ருட்டி அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
பண்ருட்டி அருகே உள்ள சின்னப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த அசோகன் (56) மகன் லோகநாதன் (24). பண்ருட்டியில் உள்ள கடையில் பணியாற்றி வந்தார். இவர் வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து வழக்கம்போல் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். பணப்பாக்கம், எம்ஜிஆர் நகர் அருகே சென்றபோது எதிரே கரும்பு ஏற்றி வந்த டிராக்டரும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி லோகநாதன் உயிரிழந்தார்.
விபத்து குறித்து புதுப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT