கடலூர்

காவலர் குடியிருப்பில் விளையாட்டுப் போட்டிகள்

தினமணி

பண்ருட்டியில் காவலர்கள், அவர்களது குடும்பத்தினர் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் காவல் நிலையம் எதிரே உள்ள திடலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் காவலர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் பங்கேற்றனர். கபடி, கையுந்துப் பந்து, இசை நாற்காலி, பானை உடைத்தல், கோலம், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சுமார் 70-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
 போட்டியை பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தொடக்கி வைத்தார். பண்ருட்டி காவல் ஆய்வாளர் ஆரோக்கியராஜ், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரேவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனவரி 13-ஆம் தேதி (சனிக்கிழமை) பரிசுகள் வழங்கப்படும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT