கடலூர்

ஜூன் 26-இல் மீனவர் குறைதீர் கூட்டம்

DIN

கடலூர் மாவட்ட மீனவர்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 26 ) நடைபெறுகிறது.
இதுகுறித்து  மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்ட மீனவர்களுக்கான குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். 
இதையடுத்து, வருகிற 26-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. 
 எனவே கடலூர் மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து மீனவ கிராம பிரதிநிதிகளும்,  மீனவ மக்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், புதிய மீன்வளத் திட்டங்கள், சலுகைகள் தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் அதில் 
தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT