முகப்பு
கடலூர்

திருவதிகையில் மாடவீதி வலம் வர உகந்த நேரம்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் பெüர்ணமியன்று பக்தர்கள் மாடவீதியை வர உகந்த நேரத்தைக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் பெüர்ணமியன்று பக்தர்கள் மாடவீதியை வர உகந்த நேரத்தைக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயிலில் மாதந்தோறும் பெüர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதியை வலம் வருகின்றனர்.
 அதன்படி, மாசி மாதம் பெüர்ணமியன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் பக்தர்கள் மாட வீதியை 16 முறை வலம் வரலாம். இரவு 7 மணி முதல் 12 மணி வரையில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.
 இரவு 11 மணி முதல் 12 மணி வரையில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →