கடலூர்

குறிஞ்சிப்பாடி பகுதியில் சார்-ஆட்சியர் ஆய்வு

DIN

குறிஞ்சிப்பாடி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டும் வரும் பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளை சார்-ஆட்சியர் சரயூ செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
 அதன்படி, கொளக்குடி மேல் பரவனாற்றின் இடதுகரை முழுவதும் 4-ஆவது நாளாக, 3 அடி உயரத்துக்கு கரை பலப்படுத்தப்படும் பணி, புவனகிரி வட்டம், துரிஞ்சிக்கொள்ளை மதுரா, மதுவானமேடு, கரிவெட்டி, சூடாமணி ஏரிகளின் வலது, இடது பக்கக் கரைகளில் பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் கரை பலப்படுத்தும் பணி, வடலூர் அருகே உள்ள ராஜாக்குப்பம் மதுரா, ஆண்டிக்குப்பம் கிராமத்தில் அய்யன் ஏரியில் இருந்து செங்கால் ஓடைக்கு செல்லும் வடிகால் வாய்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, மேலப்புதுப்பேட்டை ஏரியின் தெற்குக் கரையில் ஏற்பட்ட நீர்க் கசிவை மணல் மூட்டைகள் கொண்டு அடைக்கும் பணி, கல்குணம் கிராமத்தில் செங்கால் ஒடை கரையை பலப்படுத்தும் பணி ஆகியவற்றை சார்-ஆட்சியர் சரயூ, வட்டாட்சியர் விஜயா உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT