கடலூர்

விபத்து தடுப்பு விழிப்புணர்வு

DIN

பண்ருட்டி அருகே உள்ள ஒறையூர் கிராமத்தில், புதுப்பேட்டை காவல் நிலையம் சார்பில் சாலைப் பாதுகாப்பு, விபத்து தடுப்பு பிரசார விழிப்புணர்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு, புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், சாலை விதிகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும், செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனத்தை இயக்கக் கூடாது.  இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். தலைக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மது போதையில் வாகனம் ஓட்டக் கூடாது. வாகனம் இயக்கும்போது உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். கூட்டத்தில் ஒறையூர் கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT