கடலூர்

மதுப் புட்டிகள் பதுக்கியவர் கைது

DIN

மங்கலம்பேட்டை அருகே மதுப் புட்டிகள் பதுக்கியவரை போலீஸார்  கைது செய்தனர்.
 மங்கலம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் போலீஸார் கோ.பூவனூர் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள ஆலமரத்தின் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தவரை அழைத்து விசாரணை நடத்தினர். அதில், அவர் கோ.பூவனூர், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மகன் நாராயணன் (55) என்பதும், அனுமதியின்றி மது புட்டிகளை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. 
இதையடுத்து நாராயணனை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 11 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT