கடலூர்

விஸ்வகர்ம சங்கக் கூட்டம்

DIN

தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கக் கூட்டம் சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
 கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் ஜி.சேகர் தலைமை வகித்துப் பேசினார். ஆலோசகர் பாவாடை பத்தரப், எம்.கோவிந்தராஜ், ஏ.ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலர் பி.முத்துக்குமரன் வரவேற்றார். பொருளாளர் எஸ்.ராஜ்குமார், இளைஞரணி செயலர் எஸ்.ரமேஷ், தொழில்சங்க செயலர் ஆர்.ராமச்சந்திரன், எம்.பாலசுப்பிரமணியன், ஆர்.மாரியப்பன், எம்.சுரேஷ், தில்லைநடராஜன், ஆர்.உமாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இளைஞரணி துணைச் செயலர் கே.பாலாஜி நன்றி கூறினார். கூட்டத்தில், சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.சேகரிடம் ஸ்ரீவிஸ்வகர்மா, ஸ்ரீகாயத்ரிதேவி விக்ரகம் செய்ய நிதி உதவி அளிக்கப்பட்டது . 
தீர்மானங்கள்: சிதம்பரம் காமாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவத்தை சிறப்பாக நடத்துவது, செப்.17-ஆம் தேதி தமிழகம் முழுவதும் விஸ்வகர்ம தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT