கடலூர்

அரசுப் பேருந்துகள் மோதல்: 5 பேர் காயம்

DIN

மங்கலம்பேட்டை அருகே அரசுப் பேருந்துகள் மோதியதில் 5 பேர் வெள்ளிக்கிழமை காயமடைந்தனர்.
 சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு அரசுப் பேருந்து சுமார் 50 பயணிகளுடன் சென்னை}திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. பேருந்தை தூத்துக்குடி மாவட்டம் சிவகளையைச் சேர்ந்தர் சேர்ந்தியன் (42) ஓட்டிச் சென்றார். பேருந்து மங்கலம்பேட்டை அருகே உள்ள டி.மாவிடந்தல் பேருந்து நிறுத்தம் அருகே சென்றது. 
அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், அழகம்பாள்புரத்தை சேர்ந்த சுப்பையா மகன் கணபதி (37) ஓட்டி வந்த புதுக்கோட்டை}சென்னை அரசுப் பேருந்து திடீரென சாலையின் குறுக்கே திரும்பியது. இதனால், தூத்துக்குடி சென்றுகொண்டிருந்த பேருந்து புதுக்கோட்டை பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. 
இதில் 2 பேருந்துகளிலும் பயணம் செய்த மதுரையைச் சேர்ந்த செல்வம் (72), காளிமுத்து (65), புதுக்கோட்டையைச் சேர்ந்த க.பழனிவேல் (43), த.அருள்மொழிவர்மன் (29), திருச்சி ரா.வீரய்யா (53) ஆகிய 5 பேர் பலத்த காயமடைந்தனர்.  அவர்கள் மீட்கப்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  
 விபத்து குறித்து சேர்ந்தியன் கொடுத்த புகாரின்பேரில் மங்கலம்பேட்டை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

SCROLL FOR NEXT