கடலூர்

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

DIN

கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக இரவு நேரத்தில் மழை பெய்தது. குறிப்பாக, சனிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. மேலும், சில இடங்களில் இடி தாக்கியதில் மின்சாதனப் பொருள்கள் பழுதடைந்தன. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக மீ.மாத்தூரில் 68 மி.மீ. மழை பதிவானது.
வேப்பூர் 48, காட்டுமயிலூர் 40, லக்கூர் 32, கடலூர் 24, தொழுதூர் 10, வானமாதேவி 9, கீழச்செருவாய், பரங்கிப்பேட்டை தலா 8, பண்ருட்டி 7, கொத்தவாச்சேரி 4, பெலாந்துறை, சேத்தியாத்தோப்பு, புவனகிரி, குப்பநத்தம் ஆகிய பகுதிகளில் 3 மி.மீட்டருக்கு குறைவான மழை பதிவாகியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT